ஆயுதம் வைத்திருப்பவன்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில்பாரதி
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும் ஒவ்வொரு கவிதையும் அது பேசும் பிரச்னைக்காகத் தன் வடிவத்தையும் நீளத்தையும் தேர்ந்துகொண்டிருப்பதே எழில்பாரதி கைக்கொண்டிருக்கும் கவிதை மொழியின் சிறப்பு. ஒவ்வொரு சொல்லும் ஒரு சம்மட்டி. எந்தச் சூழ்நிலையில் எந்தத் தருணத்தில் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டது எனும் காலக் குறிப்பு இணைக்கப்பட்டிருப்பது, வாசிப்பவர்களை பெருந்தோற்றாய் ஆவேசம் பற்றிக்கொள்ள ஆயத்தப்படுத்துகிறது. என்னைக் கேட்டால், இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல கவிதைகள் அரசியல் திரைப்படத்துக்கான நெருப்பைக் கொண்டிருக்கின்றன என்பேன்.”