வீட்டைப் பராமரிப்பது எப்படி?
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A. ரமீஜா மீரான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2015
Out of StockAdd to Alert List
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் குடி புகுந்ததும் சிலர் வீட்டுப் பராமரிப்பு பற்றி கவலைப் படாமலேயே இருப்பார்கள். பெரிய அளவில் பழுது ஏற்பட்டாலொழிய அலட்டிக் கொள்ளமாட்டார்கள். சிறு விரிசல், ஓதம் தொடங்கி மழைக் காலங்களில் மாடிகளில் நீர் தேங்குவதுகூடக் கட்டிடங்களின் ஆயுளைக் குறைத்துவிடும்.
எனவே குறிப்பிட்ட இடைவேளைகளில் வீட்டைப் பராமரிப்பது மிகவும் அவசியம். சில எளிய வழி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பழுதாவதிலிருந்து வீட்டைக் காப்பாற்றலாம்.
இனி வரும் காலங்களில் மழைக்கு முன்பே நீர் வடிகால் குழாய்களில் அடைப்பு மற்றும் மாடிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் போடப்பட்டிருக்கும் பழைய பொருட்களை அப்புறப்படுத்துங்கள்.
கட்டிடம் கட்டி முடித்தவுடன் சுவர் பூச்சுக்கு மற்றும் மேல் தளத்திற்கு மேல் சிமெண்ட் பெயிண்ட் பூசலாம். இதனால் பூச்சில் இருக்கும் சிறுசிறு துளைகளும் அடைக்க வழி ஏற்படும்.