book

உயிரோவியம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சிந்து ராஜேஷ்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

அந்திவேளை… பத்தாவது தளத்தில் இருந்த ஒரு மாடத்தில் ஒரு வெள்ளைப் புறாவின் எச்சம் கீழே விழுந்த ஓசை கனமாக நூறு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மௌனத்தைக் கலைத்தது. அதைத் தொடர்ந்த ‘வெண்சிறகு’ அந்த எச்சத்தில் படர்ந்தது.

அதை ஓவியமாக மொழுகிக் கொண்டிருந்தான் வெண்மதியன்.

தனிமை விரும்பி, மனிதர்களை வெறுப்பவன், மரணத்தை வரவேற்பவன், பல சமயம் அவனது விரல்கள் தூரிகையைபோவதுண்டு. யாரும் குடிபுகாத அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் குடியுரிமைப் பெற்றவனாய் தனித்து வாழ்ந்து வந்தான். புறநகர் பகுதியில் அமைந்துயிருந்த அந்த அடுக்குமாடிப் போக்குவரத்து சரிவர இல்லாதால் அங்கு யாரும் குடிபுகாமல் இருந்தது.

வெண்மதி ஓவியம் வரையும் போதெல்லாம் ஒரு புறா அவனது மாடத்தில் வந்து அமர்ந்துக் கொள்ளும். அவன் ஓவியம் முடிக்கும் வரை அந்த மாடத்தில் அவனைப் பார்த்தபடியே கழுத்தை உள்ளும், வெளியும் இழுத்துக் கொண்டும் தனது சிறிய கண்களை உருட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருக்கும். வெண்மதியின் செறிவை அது சிதைப்பதில்லை.

அவன் தன் படைப்பை முடித்தவுடன் அங்கிருந்து பறந்து விடுகிறது. அது எங்கிருந்து வருகிறது, எங்கே தங்கிக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதில் வெண்மதியன் ஆர்வம் காட்டுவதில்லை.

வாரத்திற்கு நான்கு படங்கள் வரைவது, வரைவதை நகரத்தில் உள்ள ஓவிய கண்காட்சிகளில் பணமாக்குவதுமாய் இருந்தான் வெண்மதியன் . அங்கீகாரத்தை தேடி உருளும் இந்த சமூகக் கிடங்கில் வயதைத் தொலைத்து வாழ்க்கையைப் பணயமாக்கிக் கொண்ட மிச்சத்தில் மீதி இந்த வெண்மதி.