book

பகிரங்கக் கடிதங்கள்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாமரன்
பதிப்பகம் :நாடற்றோர் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :274
பதிப்பு :4
Published on :2021
Add to Cart

தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் எழுதினார். சினிமா, அரசியல் என்று இவர் எழுதிய பாமரனின் பகிரங்கக் கடிதங்களால் எரிச்சலுற்றவர்கள் பலருண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் படங்களைப் பற்றி குமுதத்தில் இவர் எழுதிய கடிதம் தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெகுண்டெழுந்த திரையுலகம் ‘குமுதம்’ பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமரனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது. இப்படி இவர் எழுத்து எப்போதுமே ஒரு பரபரப்பை உண்டு பண்ணும். பெரும்பாலும் இவருடைய எழுத்து சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மனிதர்கள், சமூக அவலங்கள், மனித உரிமை மீறல்களைப் பற்றியதாகவே இருக்கும்.