book

ஏ, தாழ்ந்த தமிழகமே!

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :40
பதிப்பு :5
Published on :2012
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

1945-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தை திறந்து வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு. 

ஏ தமிழ் நாடே! 
ஏ தாழ்ந்த தமிழ் நாடே! 
தேய்ந்த தமிழ் நாடே! 
தன்னை மறந்த தமிழ் நாடே! 
தன்மானமற்ற தமிழ் நாடே! 
நன்றி கெட்ட தமிழ் நாடே! 
கலையை உணராத தமிழ் நாடே! 
கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! 
மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! 
ஏ சோர்வுற்ற தமிழ் நாடே! 
வீறு கொண்டெழு! 
உண்மைக் கவிகளைப் போற்று! 
உயிர்க் கவிகளைப் போற்று! 
உணர்ச்சிக் கவிகளைப் போற்று! 
புரட்சிக் கவிகளைப் போற்று! 
புத்துலகச் சிற்பிகளைப் போற்று! 

என்று கூறி, உங்கள் அனைவரின் சார்பாகவும், பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தை திறந்து வைக்கிறேன்.     

ஆசிரியரை பற்றி : காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[7]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன.