book

சந்திர காவியம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர் பாலு
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஜோதிட சாஸ்திரத்தை நன்கு கற்றுணர்ந்து தேர்ந்த மறைந்த புலியூர் பாலு அவர்களை காஞ்சிப் பெரியவர்ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாராட்டி நற்சான்றிதழையும் வழங்கியுள்ளார். அவர் சுமார் 40 ஆண்டு காலமாக ஜோதிடத்தையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர். நம் நாடு மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு, இலங்கை, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மறைந்த புலியூர் பாலு அவர்களின் நூல்களை விரும்பிப் படிப்பவர்கள் அநேகருண்டு. புலியூர் பாலு அவர்களுக்கு பல பட்டங்களிருந்தாலும் எதையும் அவர் போட்டுக் கொண்டதில்லை. பெயரை மட்டுமே போட்டுக் கொள்ள விரும்புவார்.
வெகுநாட்களுக்குப் பிறகு அவரது இந்நூல் மீண்டும் வெளிவருகிறது. வருங்கால ஜோதிடர்களுக்கும் உபயோகப்படுமளவிலேயே ஜோதிட நூலான சந்திர காவியத்துக்கு உரை நூலாக இதனை உங்கள் மத்தியில் அவர் சமர்ப்பித்திருக்கிறார். இந்தக் காலத்திலும் வேறு உரை நூல்களிலில்லாத சந்திர காவிய பாடலுக்கு அவர் தன் சொந்தக்கருத்தில் தற்காலத்துக்கு ஏற்றவாறு மிக அழகாகவும் எளிமையாகவும் உரை எழுதியளித்திருக்கிறார் படித்து பயன் பெற வேண்டுகின்றோம்.