book

சமகால நாவல்களில் புனைவின் அரசியல்

Samakala Navalgalin Punaivin Arasiyal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. செல்வகுமாரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :109
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429489
Add to Cart

காலம், சமூகத்தின் பல தளங்களில் (பண்பாடு, அரசியல், பொருளாதாரம்) புதிது - புதிதாகத் தடங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்வது போன்றே கலை இலக்கியத்திலும் அது தன் தடத்தைப் பதித்து விட்டுச் செல்கிறது.  அந்தத் தடத்தைக் கண்டுபிடித்து, அதன் வழியே பயணித்தால் காலத்தின் சில அழுத்தமானப் பதிவுகளை நாம் அவற்றில் தரிசிக்க முடியும்.

அதிலும், அதனூடே பயணிப்பவர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாக இருந்தால், எண்ணற்ற பதிவுகளை அவர்களால் கண்டுபிடிக்க இயலும்! மட்டுமின்றி அந்தக் கலை இலக்கியத்தின் உருவ - உள்ளடக்கம், கலைஞனின் உலகக் கண்ணோட்டம், படைப்பின் நிறை - குறை, வகை மாதிரி பாத்திரங்களின் (சிறுகதை, நாவல் களாக இருந்தால்) வார்ப்பு முறை, வகை மாதிரி பாத்திரங் களுக்கும் -  அதன் தோன்றலான உண்மை மனிதர்களுக்கும் இடையே நிலவும் உறவு அதில் கலையுண்மையாக மாறுதலடைந் திருக்கும் வாழ்க்கை யுண்மை படைப்பாளியின் சார்பு நிலை - இப்படி எண்ணற்ற விஷயங்களை ஒரு கலை இலக்கியத் திறனாய்வாளனால் வாசகர் களுக்குக் கண்டுபிடித்துத் தர இயலும்.

பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவை சமமற்ற முறையில் பிளவுண்டு, முரண்பட்டுக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், மக்கள் சார் புள்ள கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமே உருவாகும் என்று எதிர் பார்க்க முடியாது.  பல்வேறு வகைப் பட்ட வர்க்கங்களின் நலனை இலை மறை காய்மறையாகப் பிரதிபலிக்கும் ஏராளமான படைப்புகளும் தோன்றும்.