book

தொல்காப்பியம் காட்டும் சமுதாயம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப.ச. ஏசுதாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :33
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427652
Out of Stock
Add to Alert List

தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

இத்தகைய பண்டைய நிலவுடைமைச் சமுதாயத்தில் இன்றைய இந்திய நாட்டிற்கு உட்பட்ட தமிழக மாநிலத்தில், முதலில் கிடைக்கப்பெற்ற இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து” வரையறுக்கப்பட்ட நிலப் பகுதியில் பல்வேறு விதமான போர்கள் நிகழ்ந்துள்ளன.

இத்தகைய போர் முறைகளைத் தொல்காப்பியரின் தொல்காப்பிய இலக்கண நூலின் வழி அறிய முடிகிறது. அதனைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. தொல்காப்பியச் சான்றுகளின் மூலமும் இலக்கண, இலக்கியங்களின் மூலமும் இதனை நன்கு அறிய முடிகின்றன