book

நாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். எம். சிவகாமி
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கற்பக விநாயகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை 19ஆம் தேதி கற்பக விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை படையலிட்டு வழிபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.