book

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஐவி பீட்டர்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788177357585
Out of Stock
Add to Alert List

சர். பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மேயராக இருந்தபொழுதுதான், முதல் முறையாக இந்தியாவிலேயே கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பகல் உணவு என்ற மதிய உணவுத் திட்டத்தினை 1920 ஆம் ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார். அதுதான் பிறகு காமராசர் ஆட்சிக் காலத்தில் பகல் உணவுத் திட்டமாக, பிறகு எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டது .

பிரதமர் பதவி என்று அந்தக் காலத்தில் அழைக் கப்படுவது முதல்வர் பதவியாகும். பிரிக்கப்படாத சென்னை ராஜதானியினுடைய  அந்த முதலமைச்சர் பதவியை, வெள்ளைக்கார கவர்னர்கள் தனக்கு அளித்தும்கூட, அதனை ஏற்க மறுத்துவிட்டார் - அதற்குப் பதிலாக தன்னுடைய கட்சியில் உள்ள வேறொருவர் முதல்வராக வரட்டும் என்று சொன்னார். பதவி வேட்கை இல்லாத ஒரு மாபெரும் தலைவராக நம்முடைய தியாகராயர் இருந்தார்.

எனவே, திராவிட இயக்கத்தவர்களுக்கெல்லாம் பதவி வேட்கைதான் என்று சொல்லுவதில் ஒன்றும் பொருளில்லை. அந்த வகையில், கடைசிவரையில் வள்ளல் பெருமானாகவே தியாகராயர் திகழ்ந்தார்.

அன்றைக்கு அவர் அடித்தளமிட்ட மேடைதான், இன்றைக்குப்பார்ப்பனரல்லாததிராவிடப்பெருங் குடி மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் படிப் புத் துறையிலும், கல்வித் துறையிலும் ஓங்கி நிற் பதற்கும், உத்தியோகத் துறையில் சமூகநீதியைப் பெற்றுள்ளதற்கும் அடித்தளமாகும்.

எனவே, அப்படிப்பட்ட தியாகராயர் பெருமான் அவர் களுடைய  அந்த நினைவு என்பது இருக்கிறதே - கடைசி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை வாழும் - தந்தை பெரியார் போன்றவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி செய்த பணியை  மிகச் சிறப்பாக செய்தவர் தியாகராயர் அவர்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.