ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இராம. சிவசக்தி வேலன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789387303355
Add to Cartஒழிவில் ஒடுக்கம் உலகப் பாசங்களிலிருந்து நீங்கி அருளில் அழுந்தித் தூய்மையடைவதற்குக் கருவியான ஒரு ஞானநூல். இதைத் திருஞானசம்பந்தர் உபதேசித்ததால் இதை சிறந்த சைவ சித்தாந்த ஞானநூல் என்றும் கூறுவர்.
“ஆன்மாவுக்குத் தெளிவைக் கொடுத்து அறிவைப் பெறச் செய்வதே ஒழிவில் ஒடுக்கம். அதுவே நூல்களுக்கெல்லாம் முதல் நூல். ஒழிவில் ஒடுக்கம் என்பது பிறப்பெடுக்கும் ஆன்மாவைச் சூழ்ந்த தத்துவக் கருவிகள் ஒழியும் பொழுது ஞானம் ஏற்பட்டு முக்தியில் ஒடுங்குவது ஆகும்’ என விளக்கம் தருகிறார் உரையாசிரியர். சரியை, கிரியை, யோகத்தால் முக்தி தாமதமாகக் கிடைக்கக்கூடும்; ஆனால், ஞானத்தின் மூலம் அதை விரைவாகப் பெறலாம் என்பதை ஆணித்தரமாக இதில் பதிவு.செய்துள்ளார் கண்ணுடைய வள்ளலார். ஞானத்தின் மூலம் முக்தி பெற விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஞான நூல்.