book

நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :216
பதிப்பு :3
Published on :2017
ISBN :9789386433251
Add to Cart

நாஸ்ட்ரடாமஸின் 'தி செஞ்சுரீஸ்' (The Centuries) என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகிற நூல். இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்து விட்டிருக்கின்றன. அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது அந்த நூலில்? 'செஞ்சுரி' என்றால் நூறாண்டு என்று கருதிக்கொண்டு விடாதீர்கள். நாலடிப் பாடல்களாய் (Quatraims) நூறுகொண்ட ஒரு 'செட்' அவ்வளவுதான். ஆனாலும் பல நூற்றாண்டுகளின் நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லும் ஒரு பஞ்சாங்கம், ஆரூடம் போன்றது இந்நூல் என்று வைத்துக் கொள்ளலாம். நாஸ்ட்ரடாமஸ் ஒரு தீர்க்கதரிசி. அவரைப் போன்றவர்கள் உலக வரலாற்றில் - வரலாற்றுலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்களே இருந்திருக்கிறார்கள். 1568-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட மூலப் பிரதியில் இருந்து இன்றுவரை எழுத்துப் பிழைகள் சொற்பிழைகள் இன்னும் தொடர்ந்தபடி இருக்கின்றன.