'விசாரணை' நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல. எளிதான விவரணை முறையில் எழுதப்பட்ட கதையும் அல்ல. மொழியும் மிகவும் வித்தியாசமானது. காஃப்காவின் தீவிரம் அவருடைய நடையை நிர்ணயிக்கிறது. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் அவர் மனம் பதிவு செய்கிறது. இதனால் முற்றுப்புள்ளிகள் அழிகின்றன. பத்திகள் இறுக்கமாக, மூச்சு விட இடமில்லாமல், நீண்டு, நெருங்குகின்றன.இவையெல்லாம் வெறும் உத்திகள் அல்ல. ஆக,காஃப்காவைத் தமிழில் கொண்டுவரும்போது நாம் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுவருவதில் பயன் இல்லை. அவர் மொழியும் தமிழில் வரக்கூடிய மொழிதான். சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் தமிழின் தனித்தன்மை கெடாமல், அதை மீறாமல் காஃப்காவின் மொழியைத் தமிழில் கொண்டுவரும்போது தமிழ் மொழியும் வரிவடைகிறது. இந்த அடிப்படைத்தான் 'விசாரணை'