“பேச்சின் வடிவங்கள், சில பழைய இலக்கண வடிவங்கள் என்று எதையும்
விலக்காத ஓட்டம். மனவோட்டத்தின் வேகத்தைக் காட்டும் ஒலியின் கோவையாக வரும்
தொடர்கள்... கருத்தும் மொழியும் கவித்துவமும் ஒன்றிய கவிதைகள் வந்து
விழுந்திருக்கின்றன, அருவிபோல...
இ. அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், சிகாகோ பல்கலைக்கழகமபிரபாத்தின் கவிதைகள் மின்மினிப்பூச்சியின் ஒளிக் கீற்று; ஒரு கணம்
அதன் ஒளிவீச்சு, மறுகணம் மறைந்துவிட்டு, மீண்டும் ஒளிவீச்சு, கண்ணையும்
காதையும் தொட்டு விளையாடுவதுபோல்; மறைபொருள், சொல்சிக்கனம், முரண்நகை,
அசாதாரண, ஆர்வமூட்டும் பார்வை, பொங்கும் மொழி இவற்றுடன் மின்மினியின்
ஒளியைப் பதிவுசெய்கிறார். உபநிஷத்துகளின் வரிகள், கம்பனின் படிமங்கள், ஜென்
கூற்றுகளை ஒத்த, தமிழுக்கேயான தொடர்கள் இவர் கவிதைகளில்
எதிரொலிக்கின்றன...