ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான
குற்றம் நிகழும்போது, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன்
குற்றவாளியா? இல்லையா? எவ்வாறு சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை
எதிர்கொள்கிறார்கள், அந்தச் சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும்
அவர்களுக்கும் எவ்வாறான, தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன,
அவ்வாறான நிலையில் அவர்கள் எந்த அளவுக்குத் தாங்களாகவே முன்வந்து
சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்ற பிரச்சினைகள் இந்நாடகத்தில்
விவரிக்கப்படுகின்றன தற்கால ஜெர்மன் ஆசிரியர்களில் முக்கியமான ஒருவராகிய
ஸீக்ஃப்ரீட் லென்ஸின் புகழ்பெற்ற நாடகம், ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகள் ஒன்றில் லென்ஸின்
படைப்பு வெளிவருவது இதுதான் முதல் தடவை.