தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரும், தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள் ஒழுக்கமும், பக்தியும் மனித வாழ்க்கையை உயர்த்தும் என்று நம்பினார்கள். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள்மக்கள் அனைவரும் உண்மை நெறியில் ஒழுக வேண்டும் மக்களை மக்கள் வெறுக்கும் செய்கை ஒழிய வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். கடவுள் ஒன்றே என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கடவுள் ஒன்று என்ற நம்பிக்கை மக்களிடம் பரவினால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள் என்பது நாயன்மார்களின் நம்பிக்கை. இவ்வுண்மைகள் தேவாரப் பாடல்களைக் கொண்டே இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
தேவார ஆசிரியர்களிடம் மொழி வெறுப்பில்லை சாதி, இன வெறுப்பில்லை. தேவார ஆசிரியர்கள் தமிழையும், வட மொழியையும் கற்றவர்கள் என்ற உண்மைகளையும் இந்நூல் கட்டுரைகளில் காணலாம்.