பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்சி, கற்பனையின் எல்லை நிஜத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு நிற்கும் கதை. இதனை வரவேற்று ஆதரித்த அத்தனை வாசக வாசகியருக்கும் மனமார்ந்த நன்றி.