தமிழ் நீதிநூல்களில் தலையாய திருக்குறள் ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப்பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வருகின்றன. இப்படியே விட்டு வைத்தால் தமிழின் தனைச்சரக்காகிய அவை இறந்து படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றையத் தமிழ்ப் பாடத் திட்டமும், அந்நூற்பாக்களுட் பல இக்காலப் போக்கிற் கேற்ப இன்மையுமே அதற்குக் காரணமாகும். இந்நிலையைப் போக்கி, தமிழ் மக்கள் எல்லோரும் அவற்றை முன் போல், விரும்பிக் கற்றுப் பயன் பெறுமாறு செய்ய எழுந்ததே நீதிக் களஞ்சியம் என்னும் இந்நூல்.