இந்நூலாசிரியர் திரு. முருகாமை துரைராஜ் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம்
சிங்கப்பெருமாள்கோவில் என்னும் ஊரில் 1942 ல் பிறந்தவர். தந்தை இராமையா
நாயுடு. தாய் நாச்சாரம்மாள். இவரது பெற்றோர்கள் திருப்போரூர் முருகனை
வேண்டிப் பிரார்த்தனை செய்ததன் பயனாக பிறந்தவர் முருகடிமை துரைராஜ்
அவர்கள், ஆனால் இளம் வயதில் நாத்திகராக இருந்து வந்த இவர். பின்னாளில்
திருச்செந்தூர் முருகனால் ஈர்க்கப்பட்டு ஆத்திகராக மாறியவர். ஜோதிடம்,
வாஸ்து, ஜெம்மாலஜி போன்ற அருங்கலைகளைத் தம் முயற்சியினாலேயே கற்றுத்
தேர்ந்தார். இவரின் எளிய பரிகாரங்கள் விதி வன் மையினால் அல்லல் படுவோர்க்கு
அருமருந்தாகும். மங்கையர் மலர் மாதப் பத்திரிகையில் ராசி பலன்கள் எழுதி
வாசகர்கள் மத்தியில் பிரபலமான இவரின் இந்நூலும் மிகுந்த வரவேற்பைப் பெறும்
என்பதில் ஐயமில்லை .