நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. அதாவது பணம், இரண்டாவது குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. மதிநுட்பம், பதவி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்க முடியும்.