விடைதேடும் வினாக்கள் ; இலங்கை பிரச்சினை பற்றிய சரியான புரிதல்களை சில கட்டுரைகளில் உணரலாம்.
தமிழர்கள் பிரச்சினை என்ற உணர்வு நிலையிலிருந்து விலகி தார்மீக நெறி சார்ந்த பார்வையில் ஈழப்பிரச்சினையை
அலசியுள்ளேன். பக்கத்து நாடான பாகிஸ்தானின் சமீபத்திய சரித்திர நிகழ்வுகளை குறிப்பாக முஷாரப்பின்
சர்வாதிகாரத்திற்கு ஏற்பட்ட சரிவையும், மெனாசிர் புட்டோ கொலைக்கு பின்னணியிலுள்ள அரசியலையும்,
மொத்தத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் எடுத்த அமெரிக்கச் சார்புநிலை அரசியலால் ஏற்பட்ட ஜனநாயக
சீர்குலைவுகளை சார்பு நிலையின்றி விவரித்துள்ளேன். மலேசியா என்ற நாட்டை உருவாக்க தமிழர்கள் செலுத்திய
மலைக்கத்தக்க உழைப்பையும், தியாகத்தையும் அங்கே சமீபத்தில் எழுந்த சர்ச்சைகளோடு சம்பந்தப்படுத்தி எழுதி
உள்ளேன். ஆனால் இவையாவும் சம்பாலத்தில் அதிக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட விவகாரங்களை, அதன் தொடர்பாக
ஏற்படுத்தப்பட்டுள்ள மாயைகளை விளக்கி, மனித நேயத்தோடு உண்மைகளை கண்டறியும் உந்துதலால் உருவானவை.
-சாவித்திரி கண்ணன்.