இது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம் சாத்தியமாகி விடுகிறது.