"புகையின் கேடுகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்க எந்த வடிவத்திலும் எந்தவித முயற்சியும் எடுக்கப்பட்டதாய்த் தெரியவில்லை. அந்த வகையில் இந்த நாவல் ஒரு முன்னோடியான முயற்சி என்று சின்னதாய் ஒரு கர்வங்கொள்ளத் தோன்றுகிறது. இந்த நாவலின் கதாநாயகனுக்குப் புகை உள்ளே போனால்தான் கவிதை வெளியே வரும் என்று இருந்ததைப் போல, தொண்டைக்குள்ளே சிகரெட் புகை இறங்கினால்தான் வேலை நடக்கும் என்கிற போலி நம்பிக்கையில் பல ஆத்மாக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. என்னுடைய லட்சியக் கதாநயாகி விநோதினி மூலமாக அந்த மாயையை அகற்ற நான் முயற்சி செய்திருக்கிறேன்.
- ஏ.ஏ.ஹெச்.கே. கோரி"