கோவையில் கொங்கு நண்பர்பர்கள் குழு அமைப்பிற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தீவைத்த மர்ம நபர்
கோவையில் கொங்கு நண்பர்பர்கள் குழு அமைப்பிற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மற்றொரு ட்ராவல் நிறுவன வாகனத்திற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நல்லாம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அங்கமான கொங்கு நண்பர்கள் குழு என்ற அமைப்பின் சார்பில் மாருதி ஆம்னி வேனை கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் நல்லாம்பாளையம் தென்றல் நகர் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் வழக்கமாக நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தீ வைத்து சென்றுள்ளார்.