சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவநெறியானது, தனக்குள் பல பிராந்தியவாரியான வேறுபாடுகளையும், சிற்சில தத்துவ வேறுபாடுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது.[1] சைவத்தின் காலத்தை வரையறுப்பது கடினமானது.