இயற்கையிலே
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இவைகளுக்கும் கட்டு
திட்டங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வேறு வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாய்
பெண் ஆணை விட அதிக மையத்தன்மை உடையவள்... அவள் அதிக அமைதியாய், அதிகப்
பொறுமையாய், அதிகக் கலக்கமில்லாமல் காத்திருக்கக் கூடியவள். ஒருவேளை இந்தக்
குணங்கள்தான் அவள் அதிக நோய் எதிர்ப்புத்தன்மையுடன் இருப்பதற்கும், ஆணைவிட
அதிக ஆயுளுடன் இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம், அவள் கலக்கமில்லாது
மெண்மையாய் இருப்பதன் மூலம், ஆணின் வாழ்வை மிகச் சிறந்த வகையில் நிறைவு
செய்யமுடியும். அவள் ஆணின் வாழ்வில் ஒரு அரவணைப்பாக, ஆதரவாகச் சுற்றிச்
சூழ்ந்திருக்கமுடியும். ஆனால் ஆண் பயப்படுகிறான், அவன் பெண்ணால் சுற்றி
வளைக்கப்படுவதை விரும்புவதில்லை. அவள் உருவாக்கும் அரவணைப்பான
சூழ்நிலையையும் அவன் விரும்புவதில்லை. ஏனெனில் அப்போது அவளை மிகவும்
சார்ந்து விடுவோமோ என்று அவன் பயப்படுகிறான்.ஆகவே நூற்றாண்டு காலமாக அவன்
அவளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே வைத்திருக்கிறான். பெண் அவளை விட அதிக
சக்தி பெற்றவள் என்பதை அடி ஆழத்தில் உணர்வதினாலேயே அவன் பயப்படுகிறான்.
அவளால் ஒரு உயிருக்குப் பிறப்பு அளிக்கமுடியும். இயற்கை இனவிருத்திக்கு
அவளையே தேர்ந்து எடுத்து உள்ளது. ஆணையல்ல. இனவிருத்தியில் ஆணின் பங்கு
கிட்டத்தட்ட இல்லையென்றே கூறலாம். இந்தத் தாழ்வு மனப்பான்மையே மிகப் பெரிய
சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆண் பெண்ணின் சிறகுகளைக் கத்தரிக்கத்
தொடங்கினான்.