படித்தவர்கள் மத்தியில், பள்ளி சென்று படிக்காமல் அன்றாடம் வாழ்க்கையில் பட்ட அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு, அறுபது வருடங்களாக நாட்டு வைத்தியனாக நானும் உலவிக் கொண்டுதான் இருக்கிறேன். கெட்ட பெயர் இல்லை. அநுபவம் என்னை ஆளாக்கி விட்டது. அனைவரும் என்மீது நம்பிக்கை வைத்து நாடி வருகிறார்கள். என் வைத்தியம் பலனளிக்கிறது. பாராட்டுகிறார்கள். என் அனுபவங்கள் நூல் வடிவில் உங்களை அடைவதில் மிக்க மகிழ்ச்சி.