இது கலைஞரின் வாழ்க்கை வரலாறல்ல, கால வரிசைப்படி எழுதப்பட்டது அல்ல... கண்ட... கேட்ட - படித்த - பல சுவையான கலைஞர் வாழ்வியல் சம்பவத் தொகுப்பே இந்த சிறுசிறு சம்பவங்கள் ரசிக்கத்தக்கவை மட்டுமல்ல! நமக்கு பாடமாகும், வேதமாகும், போக்கிஷமான நினைவுகள் கூட, பாராட்டப்படக் கூடிய முன்னுதாரண சாதனையும் சரித்திரமும் சில சொற்களில் இடம் பெறும். கலைஞர் வாழ்வு எனும் ஆழ்கடலில் சேகரித்த சில அற்புத முத்துக்கள் இவை. கலைஞருக்குள் இத்தனைக் கலைஞரா என்று அவர் பன்முகம் காட்டும் கண்ணாடி இது... ஓ! எத்தனைத் தடைகள் இவர் தாண்டி வந்தபாதை என நம்மை வியக்க வைக்கும் உணர்ச்சித் தொகுப்பு இது.