விஷ்ணு மூவுலகை அளந்த முதல்வன்.விஷ்ணுவின் பெருமைகளை முழுமையாய் விவரிக்க எவரால் ஆகும்? பாற்கடல் போன்று கிடப்பதாயிற்றே அவருடைய பிரபாவங்கள். வைணவம் ஓர்மலை.அதன் கம்பீரத்தையும், கருத்து வளங்களையும் காகித்த்தில் அடக்கிவிட முடியாது. ஆனாலும் மலையின் சிறுகல்லில் வடித்த சிலையாய் இந்நூலை உருவாக்கியிருக்கிறோம். வைணவம் ஒரு சாதனம் என்பதற்கும் மேல். அது ஓர் வாழ்க்கை நெறி என்பதை வலியுறுத்துவதே இந்நூல். தொன்மையான நமது சமயம் தொடர்ந்து வளர வேண்டும்,வலுப்பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.