க்ரைம் நாவல் மன்னர் எழுதிய இந்த புத்தகத்தை முதலில் படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைந்ததில் பேருவகை அடைந்தேன். ஒவ்வொரு தலைப்பிலும் புதுமை, ஒவ்வொரு வரியிலும் சரியான தகவல் வாசகரை சென்றடைய வேண்டும் என்ற முனைப்பும் மெனக்கெடலும் தெளிவாக தெரிந்தது. ஒரு தகவலை புலனம், முகப்புத்தகம் ஆகிய சமூக வலைத்தளங்களில் வந்தவுடன் அவை சரியாக படிக்காமலும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமலும் அள்ளித் தெளித்த கோலத்தில் அவசர கதியாக அத்தகவலை முந்தி மற்ற நபர்களுக்கு அனுப்பும் வியாதி உள்ளவர்கள் அதிகம் நிறைந்த உலகில், ஒவ்வொரு தகவலையும் பல்வேறு தளங்களுக்கு சென்று திரட்டி அதை வேறு பல தளங்களுக்கு சென்று உறுதி செய்து பிறகு அந்த தகவல் அறிந்த வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து எழுதுவது என்பது இமாலய சாதனை. அதை ஒரு கலைமகளின் அருளாசி பெற்ற பிறவி எழுத்தாளரால்தான் மட்டும் நான் முடியும். புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாக.