“பெரியார் இராமசாமி தொடங்கிய போராட்டத்தை பேராசிரியர் இராமசாமி எழுதி முடித்திருக்கிறார்.” - கலைஞர் “பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் அண்ணா விருதைப் பெற்றுள்ளார்கள். பேராசிரியர் இராமசாமி என்று சொல்வதை விட, போராட்டக்காரர் இராமசாமி என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும். காரணம், ஒரு போராட்டத்தையும் விடமாட்டார். 1965ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தை உலுக்கிய போது, அப்போது மதுரைக் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்து அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். 1965ஆம் ஆண்டு அவர் தொடங்கிய போராட்டம் இன்று வரை முடியவில்லை!
-மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்