2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. இதன்படி, விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் 25-ம் தேதி(இன்றூ) நடக்கவுள்ளது. சிறுகதை நூலுக்கான விருதை ரமேஷ் ரக்சன் எழுதிய ‘ரகசியம் இருப்பதாய்’ நூலும், நாடகத்துக்கான விருதை பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய ‘தொடரும் ஒத்திகைகள்’ நூலும், நாவலுக்கான விருதினை குணா கந்தசாமியின் ‘உலகில் ஒருவன்’ நாவலும் பெறுகின்றன.