''காப்பியப் பார்வை'' என்ற தலைப்பில் இன்றும், ''காப்பியக் களங்கள்'' என்ற தலைப்பில் நாளையும், ''காப்பிய நேர்மை'' என்ற தலைப்பில் நாளைநின்றும் பேசுவதென என் பொழிவுகளை வகுத்துக் கொண்டுள்ளேன். காப்பியப் பார்வை, என்னும் தலைப்பு பொதுவாக இருந்தாலும் கம்பர் பெருமானின் இராமாயணக் காப்பியமே இங்கு ஆராய்வதற்கு உரியது.