மனிதனை முழு மனிதனாக மாற்றும் ஆன்மிக ரசவாதமான ஸூஃபித்துவத்தைப் பயில்வதற்கான சிறந்த பாடநூல்களுள் ஒன்று இது. ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிகச் சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சார்ந்த குறிப்புரைகள் நிறைந்திருப்பதால் சுருக்கமாக இருந்தாலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது. துருவேறி நையும் தனது இரும்பு மனத்தை மாசறு பொன்னாக மாற்ற விழைவோருக்கு, தனது புழுதியை அமிர்தமாக மாற்ற முனைவோருக்கு இந்நூல் ஒரு வழித்துணையாக வரும்.