1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில், ஹஷிஷ் கூடங்கள் முதல் புனிதப் பாலைவனங்கள் வரை அலைவதில், அவன் சில குருமார்களைச் சந்திக்கிறான். இறுதியில் தனக்கு ஆன்மிக வழிகாட்டும் ஒருவரை அடைகிறான். அவனுடைய இந்தப் பயணமும், ஆனந்தமும் எளிமையும் கொண்ட ஒரு வாழ்விற்கு வழிகாட்டும் நபர்களுடனான அவனின் சந்திப்புகளுமே ஆன்மிக அறிவு, அனுபவம் பற்றிய ஓர் உலகத்தை வாசகருக்கு விரித்து வைக்கிறது. மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும் இக்கதை ஸூஃபித்துவம் குறித்த வசீகரமான அறிமுகமாகவும் உள்ளது. புதிய உலகங்களை அலசிக் காண்பதிலும், மனத்தின் புதிய அனுபவங்கள் மீதும் ஆர்வம் கொண்டோருக்கான நூல் இது.