தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான ஒரு நூல் தோழர் ஆட்டனத்தி எழுதியுள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலைகள்’ குறித்த இந்நூல் என்று குறிப்பிடலாம்.
நாவல், சிறுகதை, கட்டுரை எனப் பல துறைகளிலும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து தந்திருக்கும் ஆட்டனத்தி அவர்களின் பேருழைப்புப் பெட்டகம் இந்நூல். ஓயாது சிந்தித்து, கடுமையாக உழைத்து அவர் தந்திருக்கும் இயற்கைக் களஞ்சியமான இந்நூல், அவர் புகழை என்றென்றும் வெற்றிக் கொடியாக உயர்த்திப் பிடிக்கும்.
- சிற்பி பாலசுப்பிரமணியம்