பேராசிரியர் இ. அண்ணாமலை, தமிழ் இலக்கியம், மொழியியல் எனும் இரு துறைகளிலும் புலமைவாய்ந்தவர். இரண்டாம் மொழியாகத் தமிழ் மொழியைக் கற்பித்தல், பிறமொழியினர்க்குத் தமிழ் இலக்கியம் இலக்கணம் கற்பித்தல், அகராதி உருவாக்கம், மொழிப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் பேராசிரியர் இ.அண்ணாமலை ஆற்றியுள்ள பங்களிப்புகள் அடுத்த தலைமுறையினர்க்கு அவர் வகுத்தளித்துள்ள 'பாதை'யாகவும் அமைகின்றன. பயணிக்க வேண்டிய நம் கடமை எனும் உள் உணர்வை இந்த நூல் வழங்குகிறது.
- இரா. அறவேந்தன்