அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வியலைக் கடத்துவது எமது படைப்புகள் என்கிறார் நாடிலி. வெற்றி பெற்றவர்கள். எழுதுவதே வரலாறு என்று கூறும் இவர், கடல் மீதும் துண்டு நிலம் தேடும் இவரது பாதங்கள் தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும் என்பது அவரது வேண்டல். இத்தனைக்கும் மத்தியில் வாழ்வதற்கு நாடற்ற இவருக்கு சாவதற்கவது ஒரு நாடு வேண்டும்' என்பது உணர்ச்சியூட்டும் உள்ளத்தைக் கரைக்கும் விதமாக இந்த 'நாடிலியின் பாதக் குறிப்புகள்' என்னும் இந்த நூல் அருமையாகச் சித்திரித்துக் காட்டியுள்ளது.