பிரமிள், நகுலன், தஞ்சை பிரகாஷ், கு.அழகிரிசாமி, கௌதம சித்தார்த்தன், தேவிபாரதி, எஸ். செந்தில்குமார் போன்ற கதை சொல்லிகளின் புனைவின் அடுக்குகள் யதார்த்தத்தின் அடுக்குகளைக் கலைத்துப் போடுகின்றன; புனைவின் தீவிரம் யதார்த்தத்தின் ஆழத்தைத் தொடுகின்றது; சூரியகாந்தியைத் தீட்டத் தொடங்குவது சூரியனைத் தீட்டி விடுகின்றது. தன் உலகம் எதுவென்று கண்டு பிடிக்க ஒருவருக்கும். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் உள்ளது என்றறிந்து கொள்ள இன்னொருவருக்கும் எழுத்து துணை நிற்கின்றது.