இந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும் வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ, புகழோ நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில், முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே, செயலே சிறந்த சொல்.
தங்களின் அர்ப்பணிப்பான உணர்வுகளுடன் செயலே சிறந்த சொல்லாக இச்சமூகத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்த, செய்து சொண்டிருக்கும், செய்யப்போகும் அதிகாரிகளுக்கான இடத்தை இந்நூல் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.