சிலகப்பதிகாரம் சிலம்பொலியாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காப்பியம்.
சிலப்பதிகாரம் தொடர்பான நூல்களுக்கு இவர் அணிந்துரை வழங்கும் போது முழு
வீச்சில் சிலம்பொலியார் வெளிப்படுகிறார். இலக்கியம்,பண்பாடு,வரலாறு முதலான
துறைகளில் இவர் பெற்றுள்ள அறிவு இவர் எழுத்தில் வெள்ளம்போல் பாய்ந்து
வெளிப்படுகிறது. கவிதையிலும் காவியங்களிலும் ஆய்வுரைகளுலும் இவர் எப்போதும்
ஆராக் காதல் கொண்டவராக விளங்கிகிறார். அதைத் தெளிவாக எல்லோருக்கும்
புலப்படுத்தும் பாங்கில்தான் இவருடைய அணிந்துரைகள்யாவும்
அமைந்திருக்கின்றன.