தமிழின் செல்வங்களாகிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின்
எளிமையான, சுவையான நாவல் வடிவம் இது. காப்பியங்களைப் படிக்கவேண்டும்,
அவற்றில் உள்ள கருத்துகளை, கதைப் பின்னணியை, அன்றைய வாழ்வியலை
அறிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு உண்டா? ஆனால், அவற்றை
நேரடியாகப் படித்தால் புரியுமா என்று தயங்கி நிற்கிறீர்களா? இந்தப்
புத்தகத்துக்குள் வாருங்கள், ஒரு வரலாற்றுப் புனைகதையைப் படிப்பதுபோல்
விறுவிறுப்பான நடையில் மணிமேகலையின் கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்,
சீத்தலைச் சாத்தனாருடைய மூல நூலைத் தேடிப் படிக்கவேண்டும் என்ற விருப்பம்
உங்களுக்குள் உண்டாவது உறுதி!