தமிழகம், வேளாண்மை , தொழிற்சாலை உற்பத்தி, சேவைத் துறை எனப் பொருளாதாரத்தின் மூன்று அரங்கங்களிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி கொண்டு வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான ஆபத்துகள் அதிகம், ஆனால் இந்தப் பொருளாதார வளர்ச்சி வெறுமனே வளர்ச்சியாக இல்லாமல் மேம்பாடு, முன்னேற்றம் என்பதாகவும் உள்ளது.
இந்த முன்னேற்றத்தை மேம்பாட்டை பாதிக்காத வண்ணம் கழல் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு சிக்கலான சவால், அந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மார்க்சிய நோக்கில் முன்மொழியும் பணியைச் செய்கிறது இச்சிறுநூல்.