"குழந்தைக்கு சிரப் எழுதிக் கொடுத்தால், சிரப்தான் தர வேண்டுமா, அதே மருந்தில் டிராப்ஸ் தரக்கூடாதா? சிரப் எப்படித் தர வேண்டும்? பச்சிளம் குழந்தைக்குத் தண்ணீர் தரலாமா? படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? தடுப்பு மருந்துகள் ஏன் அவசியம்? தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா? மருந்தில்லா மருத்துவம் சாத்தியமா? கூகுள் டாக்டரிடம் ஏன் போகக்கூடாது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் வகையில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் கட்டுரைகள் அனைவரும் வாசிக்க வேண்டியவை, நூலாசிரியர் டாக்டர் முஹம்மது கிஸார் இர்ஷாத், குழந்தை மருத்துவத்தில் பல்லாண்டு கால அனுபவம் பெற்றவர். தற்போது காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகவும், குழந்தை மருத்துவராகவும் பொறுப்பு வகிக்கிறார். குழந்தை மருத்துவம் தொடர்பாக பல்வேறு இதழ்களில் எழுதி வந்துள்ளார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். ‘குழத்தை மருத்துவம்: பெற்றோர் அவசியம் அறிய வேண்டியவை’, ‘பருவமடைதல் முதல் பிரசவித்தல் வரை” ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.