வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்கையை விட்டு விட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த நூல். சராசரி மனிதர்களுக்கு தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பலியாகிறார்கள். மிக முக்கிய விடயங்களை, நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை பற்றிய சிறு கட்டுரைகளின் தொகுப்புகளே இந்த நூல். அடுத்து வரக்கூடிய தலைமுறையாவது இதை பற்றிய அடிப்படை புரிதல்களை உள்வாங்கக்கூடிய நோக்கத்தில் எழுதப்பட்டவையே இந்த கட்டுரைகள். இந்த நூலுக்கு பின் தோழர்கள் பலரின் அர்பணிப்புமிக்க நீண்ட உழைப்பு இருக்கிறது. அது இந்த உலகத்தை சாமானியனுக்கு அமைதியாக, அழகானதாக மாற்றுவதற்கான நோக்கத்தில் இருந்து பிறந்திருக்கிறது. இனி வரும் தலைமுறைக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவற்கான எங்களின் சிறு உழைப்பு உங்களின் கைகளிலிருக்கிறது. கருத்துக்களை விதைக்கிறோம். விதைத்தவர்களை விட உயரமாக வளர்வதே வளர்ச்சிக்கு அழகு…விதைத்தவர்களுக்கும் பெருமை…