“பஞ்சத்தில் சாகும் மக்களுக்கு உணவு உதவியளித்தால், அதுவே பழக்கமாகி ஏழைகள் பிற காலங்களிலும் உரிமையாய் கோருவர். இந்திய உயிர்களுக்காக பிரிட்டன் வர்த்தகத்தின் பின்னடைவை ஏற்க முடியாது.” என்ற லார்ட் லிட்டனின் வாதத்தை அப்போதைய பஞ்ச ஆணையகம் ஏற்றுக்கொண்டது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பும் பின்பும் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்னவாக இருந்தது, தற்போது WTO-வில் இந்தியா போடும் ஒப்பந்தங்கள் வரை அலசி ஆராய்கிறது இந்நூல்.