சி.கே.மாணிக்கம், விவசாய சங்கத்தில் மாநில பொறுப்புகளிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வழிகாட்டியவர். தோழர் பி.சீனிவாசராவ், ப.ஜீவானந்தம். ஆதிமூலம், எம்.காத்தமுத்து, ஏ.எஸ்.கே.அய்யங்கார் உள்ளிட்டோருடன் இணைந்து பல இயக்கங்களை நடத்தியுள்ளார்.
இவர், கட்சியின் சார்பாக சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்றைக்கு பெரிய அளவில் கட்சி அமைப்புகள் உருவாகாத காலகட்டத்தில், பல இடங்களில் கட்சி அமைப்புகளை உருவாக்கி வலிமையாக பல சங்கங்களைக் கண்டவர். விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டியவர். இவரின் வாழ்க்கைச் சுருக்கத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் தற்போது வெளியிடப்படுகிறது.
- இரா.நல்லகண்ணு