ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய கலீலுல்லாவாகிய இப்ராஹீம்(அலை) அவர்கள் ஒரு சிரை வணங்கியின் மகனாகப்பிறந்தாலும்¸ சிறு வயதிலிருந்தே ஏக இறைவனின் மார்க்கத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஏடுபட்டு வந்தார்கள். அதனால் அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காது. அவர்கள் மீது வெறுப்புற்ற நம்ரூது என்னும் அந்hநட்டு அரசன் அவர்களை நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட்டான். ஆனால் ஏக இறைவனின் கருணையால் அந்நெருப்புக் குண்டம் பூம்பொழிலாக மாறியது. அவர்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். அத்துணைத் துன்பங்களையும் கடந்து இப்ராஹீம்(அலை) அவர்கள் எவ்வாறு ஏகத்துவக் கொள்கையைப் பரப்பினார்கள் என்றும்¸ அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.