வரலாற்றில் ஒரு வாழ்வு: வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 'உங்கள் நூலகம்' மாத இதழில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிவந்த 'படித்துப்பாருங்களேன்' என்ற தொடரில் இடம் பெற்ற நூல் அறிமுகக் கட்டுரைகளின் ஐந்தாவது தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. இத் தொகுப்பில் வரலாறு குறித்த நூல்களின் அறிமுகங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கமான வரலாற்று வரைவுப் போக்கில் இருந்து விலகி மக்களை முன்நிலைப்படுத்தி எழுதப்பட்ட நூல்களே இவற்றில் அறிமுகமாகி உள்ளன. தமிழக வரலாற்று வரைவு புதிய திசை வழியில் பயணிக்க இந் நூல்கள் துணைநிற்கும் என நம்பலாம்.