அருணின் சொந்த ஊரிலிருந்த அரதப் பழசான தியேட்டரில், தினசரி மூன்று காட்சிகளாக அந்த மலையாள பலானப் படம் ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை முடிந்து ஐந்தாவது நிமிடம், மெயின் படத்துக்கு நடுவே அந்த நீலப்படக் காட்சி ஓட ஆரம்பித்தது.பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் ஓடும்போது, ஏதோ இரங்கல் கூட்டம் நடைபெறுவது போல் தியேட்டரில் ஒரு கனத்த அமைதி இருக்கும். ஆனால் அந்தக் காட்சி ஓடும்போது தியேட்டர் சலசலக்க ஆரம்பித்தது.